வெள்ளி, பிப்ரவரி 16, 2018

குறள் எண்: 0929 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0929}

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவத்தின் மயக்கத்தில் இருப்போரை, அறிவுரைக் கூறி திருத்த முயல்வது; நீரில் மூழ்கி இருப்போரை, தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு நிகராகும்!
(அது போல்...)
ஊழல் போன்ற தீமையின் உறவில் இருப்போரை, பதிவுகள் எழுதித் திருத்த முயல்வது; மதத்தால் பிரிந்து இருப்போரை, சாதியால் இணைக்க முயல்வதற்கு இணையாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக