ஞாயிறு, பிப்ரவரி 18, 2018

குறள் எண்: 0931 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0931}

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

விழியப்பன் விளக்கம்: வெற்றி பெற்றாலும், சூதை விரும்பவேண்டாம்! சூதில் வென்றவை யாவும், தூண்டில் இரையில் மறைந்திருக்கும் இரும்புக் கொக்கியை; மீன் விழுங்கியது போன்றதாகும்!
(அது போல்...)
சொத்து குவிந்தாலும், ஊழலைச் செய்யவேண்டாம்! ஊழலில் கிடைப்பவை யாவும், பொறியின் இரையில் சிக்கியிருக்கும் அடைப்புக் கதவை; எலி விடுவிப்பது போன்றதாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக