திங்கள், பிப்ரவரி 19, 2018

குறள் எண்: 0932 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0932}

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

விழியப்பன் விளக்கம்: ஒன்றைப் பெற்று, நூறை இழக்கும் சூதாட்டக் காரர்களுக்கும்; நல்லறம் பெற்று, பல்வளம் பெற்று வாழ்வதற்கு ஓர் வழி உண்டாகுமோ?
(அது போல்...)
ஒன்றைக் கொடுத்து, பலதைப் பறிக்கும் அரசியல் வாதிகளுக்கும்; பொதுநலம் பழகி, சுயநலம் துறந்து வாழ்வதற்கு ஓர் உறுதி தோன்றுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக