ஞாயிறு, பிப்ரவரி 04, 2018

குறள் எண்: 0917 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0917}

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

விழியப்பன் விளக்கம்: அறவழிக்குப் புறம்பானவற்றை மனதில் விரும்பி, பலருடன் உடலால் உறவாடும் விலைமகளிரின் தோளை; வைராக்கியமான மனதில்லாதவரே தீண்டுவர்!
(அது போல்...)
மக்களாட்சிக்கு எதிராய் இயங்கும் கட்சிகளோடு, மாறிமாறிக் கூட்டணி அமைக்கும் சாதிக்கட்சிகளின் வேட்பாளரை; ஊழலழிக்கும் கடமையறியாரே ஏற்பர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக