சனி, பிப்ரவரி 10, 2018

குறள் எண்: 0923 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0923}

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி

விழியப்பன் விளக்கம்: கள் போன்ற திரவத்தை அருந்தும் பிள்ளைகளைக் கானும், தாயின் முகமே சோகமாகும் எனும்போது; சான்றோர் முகத்தில், மகிழ்ச்சி எப்படி மலரும்?
(அது போல்...)
ஊழல் போன்ற செயலைச் செய்யும் கட்சிகளைக் காணும், தொண்டர்கள் மனமே வெறுப்பாகும் எனும்போது; பொதுமக்கள் மனதில், விருப்பம் எப்படி எழும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக