புதன், பிப்ரவரி 14, 2018

குறள் எண்: 0927 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 093 -  கள்ளுண்ணாமை; குறள் எண்: 0927}

அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்

விழியப்பன் விளக்கம்: எந்நாளும் கள் போன்ற திரவமருந்தி, கண்ணில் மயக்கம் கொள்வோர்; அம்மயக்கதை உணர்ந்த உள்ளூர் மக்களால் இழக்கப்படுவர்!
(அது போல்...)
எந்நேரமும் வஞ்சகம் போன்ற செயலிழைத்து, குணத்தில் மூர்க்கம் கொள்வோர்; அம்மூர்க்கத்தை அறிந்த சுற்றத்து உறவுகளால் விலக்கப்படுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக