ஞாயிறு, அக்டோபர் 02, 2016

குறள் எண்: 0427 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0427}

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், நிகழவிருக்கும் விடயங்களை முற்கூட்டியே அறிவர்; பகுத்தறிய இயலாதோர், அப்படி அறியும் ஆற்றல் இல்லாதவர் ஆவர்.
(அது போல்...)
உணர்வுப்புரிதல் இருப்போர், புறங்கூறுவதன் விளைவுகளை ஆழமாய் ஆராய்வர்; உணர்வுப்புரிதல் இல்லாதோர், அப்படி ஆராயும் திறம் இல்லாதவர் ஆவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக