புதன், அக்டோபர் 26, 2016

குறள் எண்: 0451 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ் சேராமை; குறள் எண்: 0451}

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

விழியப்பன் விளக்கம்: பேரின்பம் கண்ட உயர்ந்தோர், சிற்றின்பம் நாடும் தாழ்ந்தோர்க்கு அஞ்சுவர்; தாழ்ந்தோரோ, சிற்றின்பம் நாடுவோரைச் சுற்றமாகச் சூழ்வர்.
(அது போல்...)
விவசாயத்தை உயிரெனும் விவசாயிகள், விளைநிலம் அழிக்கும் வியாபாரிகளை எதிர்ப்பர்; வியாபாரிகளோ, விளைநிலத்தை அழிப்போரைப் பங்காளிகளாய் சேர்ப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக