வெள்ளி, அக்டோபர் 07, 2016

குறள் எண்: 0432 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0432}

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

விழியப்பன் விளக்கம்: கொடையளிக்காத குணம், நன்மையற்ற சுயம் மற்றும் நியாயமற்ற மகிழ்ச்சி - இம்மூன்றும், அரசாள்வோரின் குற்றங்களாகக் கருதப்படும்.
(அது போல்...)
திருப்தியில்லாத வரவேற்பு, உண்மையற்ற நம்பிக்கை மற்றும் தேவையற்ற துரோகம் - இம்மூன்றும், இல்லத்தலைமையின் பாவங்களாக உணரப்படும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக