திங்கள், அக்டோபர் 10, 2016

குறள் எண்: 0435 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0435}

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

விழியப்பன் விளக்கம்: குற்றம் நிகழும் முன்பே, அதைப் பகுத்தறியும் சிந்தனையுடன் தடுக்காதோர் வாழ்க்கை; பெருநெருப்புக்கு அருகிலிருக்கும், வைக்கோற்போர் போல் அழியும்.
(அது போல்...)
உறவைப் பிரியும் முன்பே, அதை அன்பெனும் கருவியுடன் தவிர்க்காதோர் நிலைமை; சூறாவளியில் அகப்பட்ட, பொருட்கள் போல் தடம்புரளும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக