செவ்வாய், அக்டோபர் 18, 2016

குறள் எண்: 0443 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0443}

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

விழியப்பன் விளக்கம்: அனுபவமுடையப் பெரியோரைப், பேணித் தமக்கு நெருக்கமாய் கொள்வது; பெறமுடிந்த அரிதானப் பேறுகள் அனைத்திலும் அரிதானதாகும்.
(அது போல்...)
நேர்மையானத் தலைவர்களை, அறிந்து நமக்கு வழிகாட்டியாய் தொடர்வது; சாத்தியமான சிறந்த பிறவிப்பயன்கள் அனைத்திலும் சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக