வியாழன், அக்டோபர் 20, 2016

குறள் எண்: 0445 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0445}

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாரைத் தன் கண்ணாகக் கொண்டு பயணிப்பதால்; அரசாள்பவர் -  சூழ்ந்து கொள்ளவேண்டிய, பெரியோரைச் சூழ்ந்துகொள்ள வேண்டும்.
(அது போல்...)
பெற்றோரைத் தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வளர்வதால்; பிள்ளைகள் - பேணிப் பாதுகாக்கவேண்டிய, பெற்றோரைப் பேணுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக