ஞாயிறு, அக்டோபர் 09, 2016

குறள் எண்: 0434 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0434}

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

விழியப்பன் விளக்கம்: குற்றமே அழிவுக்கு வித்திடும் பகை என்பதால்; குற்றச்செயல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதை, கடமையாகக் கருதவேண்டும்.
(அது போல்...)
சிற்றின்பமே பிறவிப்பயனை அழிக்கும் நஞ்சு என்பதால்; சிற்றின்பங்களில் இருந்து விலகி இருப்பதை, வைராக்கியமாய் பழகவேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக