செவ்வாய், அக்டோபர் 04, 2016

குறள் எண்: 0429 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0429}

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

விழியப்பன் விளக்கம்: எதிர்காலத் தேவையை உணர்ந்து, அதற்கேற்ப திட்டங்களை வகுக்கும் அறிவுடையவர்க்கு; அவரை நிலைகுலையைச் செய்யும், எந்த இன்னலும் நேர்வதில்லை.
(அது போல்...)
தலைவர்களின் தகுதிகளை ஆராய்ந்து, அதையொத்து தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு; அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்கும், எந்த ஆட்சியும் அமைவதில்லை.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக