வெள்ளி, அக்டோபர் 28, 2016

குறள் எண்: 0453 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0453}

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் உணர்ச்சி, அவரின் மனநிலையை ஒட்டி இருக்கும்; அதுபோல் ஒருவர் இவ்வகையானவர் என்பது, அவரின் சுற்றத்தையொட்டி  வரையறுக்கப்படும்.
(அது போல்...)
பிள்ளைகளின் செயல்பாடுகள், பெற்றோர்களின் இயல்பை ஒட்டி அமையும்; அதுபோல் ஆட்சியாளர் இத்தகையானவர் என்பது, அவர்களின் தொண்டர்களால் நிர்ணயிக்கப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக