திங்கள், அக்டோபர் 17, 2016

குறள் எண்: 0442 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0442}

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

விழியப்பன் விளக்கம்: நேர்ந்த துன்பத்தை மாற்றி, நேரவிருக்கும் துன்பத்தை முன்பே தடுக்கும்; அனுபவம் உடையவரைப் பேணி, அவரின் துணையைப் பெறவேண்டும்.
(அது போல்...)
நிகழ்ந்த அனைத்தையும் மறந்து, நிகழவிருக்கும் செயல்களில் மனதைச் செலுத்தும்; வைராக்கியம் உள்ளவரைக் கண்டு, அவரைத் தொடருதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக