வியாழன், அக்டோபர் 06, 2016

குறள் எண்: 0431 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0431}

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

விழியப்பன் விளக்கம்: குற்றச்செயல்களை விதைக்கும், "ஆணவம்/சினம்/சிறுமைத்தனம்" போன்ற காரணிகளை நீக்கிய ஆட்சியாளரின் வளர்ச்சி; பெரும் போற்றுதலுக்கு உரியதாகும்.
(அது போல்...)
சிற்றின்பங்களைப் பெருக்கும், "மது/மாது/சூது" போன்ற போதைகளைத் தவிர்த்த படைப்பாளியின் படைப்புகள்; உயரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக