வியாழன், அக்டோபர் 27, 2016

குறள் எண்: 0452 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0452}

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

விழியப்பன் விளக்கம்: சேரும் நிலத்தின் தன்மைக்கேற்ப, நீரின் தன்மை வேறுபடும்; அதுபோல் சேரும் இனத்தின் இயல்புக்கேற்ப, மக்களின் அறிவு வேறுபடும்.
(அது போல்...)
ஊற்றப்படும் அச்சின் உருவுக்கேற்ப; உருகிய உலோகம் உருமாறும்; அதுபோல் தத்தம் தலைமையின் தன்மைக்கேற்ப, கட்சியின் செயல்பாடுகள் அமையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக