திங்கள், அக்டோபர் 03, 2016

குறள் எண்: 0428 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0428}

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

விழியப்பன் விளக்கம்: அறம்சார்ந்த பயத்திற்கு அஞ்சாதது, அறியாமையாகும்; அறம்சார்ந்த பயத்திற்கு அஞ்சுவதே, பகுத்தறிவின் இயல்பாகும்.
(அது போல்...)
மனதறிந்த துரோகத்திற்கு தயங்காதது, தீவிரவாதமாகும்; மனதறிந்த துரோகத்திற்கு தயங்குவதே, நற்குணத்தின் தன்மையாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக