செவ்வாய், அக்டோபர் 11, 2016

குறள் எண்: 0436 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0436}

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

விழியப்பன் விளக்கம்: நிகழ்வதற்கு முன்பாகவே, தன் குற்றத்தைக் களைந்து; பிறர் குற்றத்தையும் களையும் வல்லமையான தலைவனுக்கு, எது குற்றமாக ஆகமுடியும்?
(அது போல்...)
அனுபவிப்பதற்கு முன்பாகவே, தன் சிற்றின்பத்தைத் தவிர்த்து; பிறர் சிற்றின்பத்தைத் தவிர்க்கும் திறமையான நட்புக்கு, எது சிற்றின்பமாக அமையும்?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக