ஞாயிறு, அக்டோபர் 30, 2016

குறள் எண்: 0455 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0455}

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

விழியப்பன் விளக்கம்: சிந்தனையின் தூய்மை மற்றும் செயலின் தூய்மை - இவையிரண்டும், ஒருவரின் இனத்தின் தூய்மையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
பெற்றோரின் வாய்மை மற்றும் பிள்ளைகளின் வாய்மை - இவ்விரண்டும், அவரின் முன்னோர்களின் வாய்மையைக் கொண்டு வகுக்கப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக