சனி, அக்டோபர் 08, 2016

குறள் எண்: 0433 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 044 -  குற்றங்கடிதல்; குறள் எண்: 0433}

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

விழியப்பன் விளக்கம்: பழிக்கு அஞ்சுவோர், தினையளவு குற்றம் விளைவிக்கும் செயலையும்; பனையளவாய் நினைத்து, குற்றங்களைக் களைவர்.
(அது போல்...)
மக்களை மதிப்போர், துளியளவு ஊழல் நடக்கும் துறையையும்; கடலளவாய் எண்ணி, காரணிகளை அலசுவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக