சனி, அக்டோபர் 29, 2016

குறள் எண்: 0454 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0454}

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

விழியப்பன் விளக்கம்: அறமற்ற சுற்றத்தை உடையவரின் அறிவு, அவரின் மனதைப் பிரதிபலிப்பதாய் தோற்றமளித்து; இறுதியில், அவரின் சுற்றத்தைப் பிரதிபலிப்பதாய் மாறும்.
(அது போல்...)
நேர்மையற்ற சுயத்தை உடையவரின் வசதி, அவரின் உழைப்பை உணர்த்துவதாய் பறைசாற்றி; பின்னர், அவரின் ஊழலை உணர்த்துவதாய் முடியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக