சனி, அக்டோபர் 22, 2016

குறள் எண்: 0447 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0447}

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

விழியப்பன் விளக்கம்: தவறுகளை இடித்துரைக்கும் பெரியோரின் துணையுடைய அரசாள்பவரை; கெடுக்கும் திறனுடையவர், எவரிருக்க முடியும்?
(அது போல்...)
குறைகளைக் களையெடுக்கும் சிந்தனையின் வலிமையை அறிந்தவர்களை; அழிக்கும் சிற்றின்பம், ஏதிருக்க முடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக