செவ்வாய், அக்டோபர் 25, 2016

குறள் எண்: 0450 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0450}

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

விழியப்பன் விளக்கம்: நல்லறம் போதிக்கும் பெரியவர் ஒருவரின், உறவைக் கைவிடுதல்; பலரின் பகையைக் கொள்வதை விட, பன்மடங்கு அதீத தீமையை விளைவிக்கும்.
(அது போல்...)
நல்லாட்சி அளிக்கும் தலைவர் ஒருவரை, ஆதரிக்க மறுத்தல்; பல்வகை ஊழல்கள் செய்வதை விட, பன்மடங்கு அதிக ஒழுங்கீனத்தை உருவாக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக