புதன், அக்டோபர் 19, 2016

குறள் எண்: 0444 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0444}

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை

விழியப்பன் விளக்கம்: தம்மைவிட அறிவார்ந்தப் பெரியோரைத், தமக்கு நெருக்கமாக்கிக் கொள்ளுதல்; வலிமையானவை எல்லாவற்றிலும் முதன்மையாகும்.
(அது போல்...)
நம்மைவிட வைராக்கியம் உள்ளவரை, நமக்கு குருவாய் தொடருதல்; தேடல்கள் அனைத்துக்கும் வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக