வெள்ளி, அக்டோபர் 21, 2016

குறள் எண்: 0446 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 045 -  பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்: 0446}

தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்

விழியப்பன் விளக்கம்: தகுதியுடையப் பெரியோர்களின் வட்டத்தில், தன்னை இணைக்கவல்ல வல்லவர்களை; அழிப்பதற்கு, பகைவர்களுக்கு ஒன்றுமில்லை.
(அது போல்...)
சக்திவாய்ந்த தலைவர்களின் கழகத்தில், தம்மை ஈடுபடுத்தும் இளைஞர்களை; தடம்புரட்ட, கேளிக்கைகளுக்கு இடமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக