புதன், மார்ச் 08, 2017

குறள் எண்: 0584 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0584}

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

விழியப்பன் விளக்கம்: தமக்கு வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி, அனைவரையும் நடுநிலையோடு அணுகி; உளவுத்தொழில் ஆற்றுவதே, ஒற்றரிவோரின் கடமையாகும்.
(அது போல்...)
தம்மைக் கவர்ந்தவர்/கவராதவர் என்ற வித்தியாசமின்றி, அனைவரையும் தம்மியல்போடு நெருங்கி; ஆய்ந்தறிந்து  உணர்வதே; தேடலுள்ளோரின் அடிப்படையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக