செவ்வாய், மார்ச் 21, 2017

குறள் எண்: 0597 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0597}

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு

விழியப்பன் விளக்கம்: அம்புகள் துளைத்தாலும், யானை தன் உறுதியை நிலைநாட்டும்! அதுபோல் தோல்விகள் நேர்ந்தாலும், ஊக்கமுடையோர் தம் தரத்தை இழக்க மாட்டார்கள்!
(அது போல்...)
ஆழ்துளைகள் சிதைத்தாலும், பூமி தன் பொறுமையைப்  பேணிக்காக்கும்! அதுபோல் துன்பங்கள் பெருகினாலும், அன்புடையோர் தம் குடும்பத்தைப் பிரிய மாட்டார்கள்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக