ஞாயிறு, மார்ச் 26, 2017

குறள் எண்: 0602 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0602}

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: தம் குடும்பத்தை, தலைசிறந்த குடும்பமாய் உயர்த்தும் வைராக்கியம் உடையவர்கள்; சோம்பலை, சோம்பலடையச் செய்யும் ஊக்கமுடன் வாழவேண்டும்!
(அது போல்...)
தம் சரித்திரத்தை, உலகளாவிய சரித்திரமாய் எழுதிட விரும்பும் தலைவர்கள்; தீவிரவாதத்தை, தீவிரவாதத்தால் ஒழிக்கும் உறுதியுடன் உழைக்கவேண்டும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக