புதன், மார்ச் 29, 2017

குறள் எண்: 0605 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0605}

நெடுநீர் மறவி மடிதுயி நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

விழியப்பன் விளக்கம்: தாமதம்/மறதி/சோம்பல்/தூக்கம் - இவை நான்கும்; வாழ்க்கையை அழிக்கும் இயல்புடையோர், விரும்பும் மரக்கலங்களாகும்.
(அது போல்...)
பொய்/வஞ்சம்/பேராசை/புறங்கூறல் - இவை நான்கும்; குடும்பத்தைச் சிதைக்கும் குணமுடையோர், இரசிக்கும் அணிகலன்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக