திங்கள், மார்ச் 13, 2017

குறள் எண்: 0589 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0589}

ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்

விழியப்பன் விளக்கம்: ஒரே விடயத்திற்கு, ஒருவரையொருவர் அறியாமல் பல ஒற்றர்களை நியமித்து ஆளவேண்டும்; மூன்று ஒற்றர்களின் கூற்று ஒத்திருப்பின், அதில் தெளிவடைய வேண்டும்.
(அது போல்...)
ஒரே பிரச்சனைக்கு, ஒருவரையொருவர் அறியாமல் பல உறவுகளை விசாரித்து அறியவேண்டும்; மூன்று உறவுகளின் விளக்கம் ஒன்றினால், அதைப் பரிசீலிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக