வியாழன், மார்ச் 23, 2017

குறள் எண்: 0599 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0599}

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்

விழியப்பன் விளக்கம்: பேருடம்பு மற்றும் கூர்மையான தந்தங்கள் இருந்தும், புலியின் தாக்குதலுக்கு யானை அஞ்சும்! அதுபோல் ஊக்கமுடைமை, எவ்வித தடைகளையும் தகர்க்கும்!
(அது போல்...)
பீரங்கி மற்றும் வலிமையான அணுகுண்டுகள் இருந்தும், அஹிம்சையின் சக்திக்கு எதிரிகள் மிரள்வர்! அதுபோல் அன்புடைமை, எவ்வித உறவுகளையும் சமாளிக்கும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக