புதன், மார்ச் 22, 2017

குறள் எண்: 0598 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0598}

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: கொடை அளிக்கும் ஊக்கம் இல்லாதவர்; இவ்வுலகில் "வள்ளல்" எனும் உயர்ந்த நிலையை அடைவது சாத்தியமில்லை!
(அது போல்...)
பொதுநலம் காக்கும் முனைப்பு இல்லாதோர்; அரசியலில் "கர்மவீரர்" எனும் சிறந்த பெருமையை அடைவது அரிதானது!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக