ஞாயிறு, மார்ச் 19, 2017

குறள் எண்: 0595 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0595}

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

விழியப்பன் விளக்கம்: பூக்களின் வளர்ச்சி, நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப இருக்கும்! அதுபோல் புகழ்/செல்வம் போன்ற வளர்ச்சிகள், மக்களின் ஊக்கத்திற்கு ஏற்ப இருக்கும்!
(அது போல்...)
செயல்களின் அறம், சிந்தனையின் தன்மைக்கு ஏற்ப இருக்கும்! அதுபோல் மனிதம்/நேர்மை போன்ற குணங்கள், குடும்பத்தின் ஒழுக்கத்திற்கு ஏற்ப இருக்கும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக