சனி, மார்ச் 11, 2017

குறள் எண்: 0587 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0587}

மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று

விழியப்பன் விளக்கம்: இருளில் மறைவாய் நடக்கும் விடயங்களைக் கேட்டறிந்து, அறிந்தவற்றில்; எவ்வித ஐயப்பாடும் இல்லாத, தெளிவைக் கொண்டதே உளவுத்துறை.
(அது போல்...)
மனதில் புதைந்து இருக்கும் உணர்வுகளைக் வெளிக்கொணர்ந்து, கொணர்ந்தவற்றில்; எவ்வித அவநம்பிக்கையும் கொள்ளாத, அன்பை உடையோரே உறவுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக