வெள்ளி, மார்ச் 10, 2017

குறள் எண்: 0586 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0586}

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று

விழியப்பன் விளக்கம்: பற்றற்றோரின் தன்மையுடன், விருப்பு/வெறுப்பு கடந்து ஆராய்ந்து; ஆராயப்படுவோர் என்ன துன்பம் செய்தாலும், சோர்வு அடையாததே உளவுத்துறை.
(அது போல்...)
நடுநிலையான இயல்புடன், ஆண்/பெண் பேதமின்றி பேணிக்காத்து; குழந்தைகள் எவ்வகை குறை கொண்டிருந்தாலும், வெறுப்பு அடையாதோரே பெற்றோர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக