வியாழன், மார்ச் 09, 2017

குறள் எண்: 0585 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0585}

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

விழியப்பன் விளக்கம்: சந்தேகம் விளைவிக்காத தோற்றத்துடன் - எவரும் சந்தேகிப்பேனும், கண்ணில் அச்சமின்றி; எந்நிலையிலும் தன்னை வெளிப்படுத்தாத, வல்லமைக் கொண்டதே ஒற்றுத் தொழிலாகும்.
(அது போல்...)
பகையை உருவாக்காத உறுதியுடன் - எவரும் பகைத்தாலும், பேச்சில் பொய்யின்றி; எக்காலத்திலும் தன்னிலை இழக்காத, வைராக்கியம் உடையதே நட்பெனும் உறவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக