சனி, மார்ச் 25, 2017

குறள் எண்: 0601 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0601}

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்

விழியப்பன் விளக்கம்: சோம்பல் என்னும் தூசுத் துகள், தொடர்ந்து சேர்ந்தால்; குடும்பம் என்னும் அணையாத விளக்கு, ஒளியை இழந்து கெட்டழியும்!
(அது போல்...)
குழப்பம் என்னும் அறியாமைக் காரணி, தொடர்ந்து பெருகினால்; கல்வி என்னும் அழியாப் புகழ், புரிதலை இழந்து தடம்புரளும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக