வெள்ளி, மார்ச் 17, 2017

குறள் எண்: 0593 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0593}

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்

விழியப்பன் விளக்கம்: உறுதியான ஊக்கத்தைத் தம் வசம் உடையோர்; "சம்பாதித்த செல்வத்தை இழந்தோம்" என புலம்பி, சோர்வடைய மாட்டார்கள்.
(அது போல்...)
சிறப்பான திறமையைத் தம் வசம் உடையோர்; “கொடுத்த வாய்ப்பை இழந்தோம்” என சொல்லி, துன்பமடைய மாட்டார்கள்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக