செவ்வாய், மார்ச் 14, 2017

குறள் எண்: 0590 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0590}

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை

விழியப்பன் விளக்கம்: உளவுத்துறையினரைச் சிறப்பிப்பதை, ஊரறிய செய்யவேண்டாம்; அப்படிச் செய்தால், உளவுத்துறை இரகிசியங்களை - அரசாள்பவரே வெளிப்படுத்தியதாய் அமையும்.
(அது போல்...)
புரளிப்பேசுவோரை எதிர்ப்பதை, வெளிப்படையாய் செய்யவேண்டாம்; அப்படிச் செய்தால், தன்னைப் புரளிப்பேச - தானே வரவேற்பதாய் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக