ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

குறள் எண்: 0749 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0749}

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்

விழியப்பன் விளக்கம்: போர்முனையில் இருக்கும் போது, பகைவர்களைச் சாய்க்கும் வண்ணம்; செயலாற்ற வேண்டிய போது, உள்ளிருக்கும் வீரர்களை வீறுகொளச் செய்வதே அரணாகும்.
(அது போல்...)
பொருளாதாரச் சிக்கலின் போது, ஆடம்பரத்தைக் குறைக்கும் வண்ணம்; தேவையான தருணத்தின் போது, குடும்பத்து உறுப்பினர்களைப் பொறுப்புணர வைப்பதே தலைமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக