திங்கள், ஆகஸ்ட் 07, 2017

குறள் எண்: 0736 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0736}

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை

விழியப்பன் விளக்கம்: பகைவர்களால் அழிவைச் சந்திக்காமல், அழிவேதும் நிகழ்ந்தாலும்; எவ்வித வளத்திலும் குறையாத நாடே, எல்லா நாடுகளிலும் தலையானது எனப்படும்.
(அது போல்...)
உணர்வுகளால் பாதிப்புக்கு உள்ளாகாமல், பாதிப்பேதும் அடைந்தாலும்; எவ்வித உணர்ச்சியாலும் வெளிப்படுத்தாத மனிதரே, எல்லா மனிதரிலும் புனிதர் எனப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக