செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

குறள் எண்: 0758 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0758}

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை

விழியப்பன் விளக்கம்: கடன் ஏதுமின்றி, நம் கையிலிருக்கும் இருப்பைக் கொண்டு வாழ்வியல் செய்வது; குன்றின் மீதேறி, யானைகளின் சண்டையைப் பார்ப்பது போல் பாதுகாப்பானதாகும்!
(அது போல்...)
குறை ஏதுமின்றி, நம் சுற்றத்திலிருக்கும் உறவை இணைத்து இல்லறம் நடத்துவது; தந்தையின் தோளேறி, திருவிழாக் கண்காட்சிகளை இரசிப்பது போல் பத்திரமானதாகும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக