செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

குறள் எண்: 0730 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 073 - அவையஞ்சாமை; குறள் எண்: 0730}

உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்

விழியப்பன் விளக்கம்: அவையைக் கண்டு அஞ்சி, தாம் கற்றதை நன்முறையில் எடுத்துரைக்க இயலாதோர்; உயிருடன் இருப்பினும், இறந்தவருக்கு இணையாவர்.
(அது போல்...)
பகைவரைப் பார்த்து பயந்து, தம் வலிமையை முழுமையாய் வெளிப்படுத்த முடியாதோர்; வீரராய் இருப்பினும், கோழைக்கு ஒப்பாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக