திங்கள், ஆகஸ்ட் 21, 2017

குறள் எண்: 0750 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 075 - அரண்; குறள் எண்: 0750}

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்

விழியப்பன் விளக்கம்: எவ்வகை மகிமையை உடையது ஆயினும்; போரை வெல்லும் மகிமையற்ற வீரர்களைக், கொண்டிராமல் இருப்பதே அரணாகும்.
(அது போல்...)
எவ்வித முனைப்பை உடையது எனினும்; ஊழலை ஒழிக்கும் முனைப்பற்ற நிர்வாகிகளைக், கொண்டிராமல் இருப்பதே கட்சியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக