வியாழன், ஆகஸ்ட் 03, 2017

குறள் எண்: 0732 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0732}

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அரும்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

விழியப்பன் விளக்கம்: அளவுகடந்த பொருள் வளத்தால், எல்லோரின் விருப்பத்திற்கும் உள்ளாகி; எவ்வித கேடுகளும் இல்லாமல், அளவற்ற விளைச்சலைக் கொண்டிருப்பதே நாடாகும்.
(அது போல்...)
குறையற்ற சமுதாயப் பயனால், அனைவரின் ஆதரவையும் பெற்று; இயற்கைக்கு பாதகம் ஏதுமின்றி, எண்ணற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதே வளர்ச்சியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக