வெள்ளி, ஆகஸ்ட் 11, 2017

குறள் எண்: 0740 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0740}

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
வேந்தமைவு இல்லாத நாடு

விழியப்பன் விளக்கம்: ஓர் நாட்டிற்கு, மக்களாட்சியை உணராத அரசு வாய்ப்பின்; நாட்டின் இலக்கணத்திற்கான எல்லாக் காரணிகள் இருப்பினும், அவற்றால் எவ்விதப் பயனும் இல்லை.
(அது போல்...)
ஓர் மனிதனுக்கு, மனசாட்சியை மதிக்காத மனது இருப்பின்; மனித அடிப்படைக்கான அனைத்துத் தகுதிகள் இருப்பினும், அவற்றால் எந்தப் பலனும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக