புதன், ஆகஸ்ட் 02, 2017

குறள் எண்: 0731 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0731}

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு

விழியப்பன் விளக்கம்: உற்பத்தியை நிறுத்தாத விவசாயிகள்/அறத்தை மறக்காத சான்றோர்/எதற்கும் தாழ்ச்சியடையாத செல்வந்தர் - இவர்கள் சேர்ந்ததே நாடாகும்.
(அது போல்...)
அறத்தை மீறாத பெற்றோர்/நீதியைச் சிதைக்காத ஆட்சியர்/எதிலும் குறைவில்லாத முன்னோர் - இவர்களை உள்ளடக்கியதே சமுதாயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக