வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

குறள் எண்: 0733 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 07 - அரணியல்; அதிகாரம்: 074 - நாடு; குறள் எண்: 0733}

பொறையொருங்கு மேல்வரும்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு

விழியப்பன் விளக்கம்: பல்வகை சுமைகள் ஒருங்கிணைந்து, தம்மேல் சுமத்தப்படும் போது; அவற்றைத் தாங்கி அரசாள்பவரோடு ஒருங்கிணைந்து, அரசுக்குத் துணை நிற்பதே நாடாகும்.
(அது போல்...)
பல்வேறு குழப்பங்கள் ஒருசேர, தம்முள் அழுத்தும் போது; அவற்றைக் களைந்து உறவுகளோடு ஒன்றுசேர்ந்து, இன்பத்திற்கு வழி வகுப்பதே இல்லறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக